Sunday 27 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 6

அங்கமா யாதியாய் வேத மாகி
..அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
..பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
..கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
..எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே


பதம் பிரித்த வடிவம்:


அங்கமாய் ஆதியாய் வேதமாகி
..அருமறையோடு ஐம்பூதம் தானேயாகிப்
பங்கமாய்ப் பலசொல்லும் தானேயாகிப்
..பால்மதியோடு ஆதியாய்ப் பான்மையாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னியாகிக்
..கடலாகி மலையாகிக் கழியுமாகி
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வனாகி
..எழுஞ்சுடராய் எம் அடிகள் நின்றவாறே


எங்கும் பரவும் ஒளியான சிவபெருமான்:
1. அங்கம் - ஆறு அங்கமான - சிக்ஷை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் - இவைகள்.
2. இவற்றின் ஆதி
3. நான்மறைகள்
4.அருமறை = அரிய மந்திரங்கள்
5. ஐந்து பூதங்கள், அவற்றின் தேவதைகள்
6. சொல்லப்படும் நல்ல சொற்கள், தீயோரைப் பழிக்கும் கொடுஞ்சொற்கள்
7. வெண்ணிலவு
8. உலகின் தோற்றம் (மூலம்), வினைகள் (பான்மை)
9. கங்கை, காவிரி ஆகிய நதி தேவதைகள், கன்னி = கன்னியாகுமரி (குமரி முனை)
10. கடல், மலை, கழி நிலம்
11. எங்கும் வியாபிக்கும் தலைவன்
12. ஏறு மேல் ஊர்ந்து வரும் செல்வன்

இவ்வாறாக அனைத்துமாய் ஆனார்.

No comments:

Post a Comment