Wednesday 23 August 2017

உருத்திர தாண்டகம் - பாடல் 3

கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
..காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
..புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
..சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே

கல்லாகிக் களறு ஆகிக் கானும் ஆகிக்
..காவிரியாய்க் கால் ஆறு ஆய்க் கழியும் ஆகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடும் ஆகிப்
..புரம் ஆகிப் புரம் மூன்றும் கெடுத்தான் ஆகிச்
சொல்லாகிச் சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகிச்
..சுலாவு ஆகிச் சுலாவுக்கு ஓர் சூழலாகி
நெல்லாகி நிலனாகி நீரும் ஆகி
..நெடுஞ்சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்றவாறே

கல் = மலை
களறு = விளை நிலம்
கான் = காடு
கால் ஆறு = வாய்க்கால் வழி (ஆறு = வழி)
கழி = கடல் அருகில் இருக்கும் இடம்

நெடுஞ்சுடராய் நிமிர்ந்து நின்ற சிவபெருமான்,
1. மலை, நிலம், காடு முதலியவைகள் ஆனார்
2. பெரிய காவிரி நதியாகவும், சிறிய வாய்க்கால் வழியாகவும், கடற்கரையாகவும் ஆனார்

இவ்வாறாக குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் எனும் நிலங்கள் வந்துவிட்டது.

3. புல், புதர், பூடு = செடி வகைகள்.
4. புரம் = நாடு, நகரம் ஆனார்.
5. அசுரர்களின் முப்புரங்களையும் அழித்தவனாகவும் ஆனார்
6. சொற்களாய் ஆனார். அந்த சொல்லின் பொருளாக ஆனார்
7. உயிர் மூச்சானார். சுலாவு = காற்று. போக்கும் வரவும் உள்ளது. (inhalation, exhalation)
8. அந்தக் காற்று நிலவும் சூழல் (வளிமண்டலம்) ஆனார் (atmosphere)
9. நெல் மணியாகவும், பயிரிடப்படும் நிலனாகவும், நிலத்தில் பாய்ச்சப்படும் நீராகவும் ஆனார்.

No comments:

Post a Comment