Tuesday 25 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 10

மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சி வாயபத்
தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே

பொருள்:

மாப்பிணை தழுவிய - மாப்பு இணை தழுவிய. மாப்பு - மான் குட்டி
பூப்பிணை திருந்தடி - பூ பிணைந்த திருவடி
நாப்பிணை தழுவிய - நா - நாக்கு. நாவினில் நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தினை வைத்த அடியார்கள்.

மானைக் கையில் ஏந்தியவானும், மாதினை (பெண்) ஒரு பாகத்தில் கொண்டவனும்,   மலர் மாலைகள் சார்த்தப் பட்ட திருவடிகளைக் கொண்டவனுமான சிவனை, மனங்கனிந்து கைதொழுது, நாவில் நமச்சிவாய பதிகத்தை கொண்டு அவனைத் துதிப்போர்க்கு எவ்வித துன்பமும் இல்லை.

பாடல் கேட்க:

ராகம் - சுருட்டி
தாளம் - ஆதி


Check this out on Chirbit

2 comments:

  1. I heard all the songs connected with this pathikam. All are nice. The Hindolam and surutti are superb. I repeatedly heard them

    ReplyDelete