Monday 17 October 2016

நமச்சிவாயப் பதிகம் - 08

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே

பொருள்:
இல்லத்தில் ஏற்றும் விளக்கானது, வீட்டில் உள்ள இருளை நீக்க வல்லது.
ஆனால் நமச்சிவாய என்னும் மந்திரம், சொல்லின் (வேதத்தின்) அகத்தில் (உள்ளே) விளங்குவதாகும். சோதி நிறைந்தது. தேஜஸ் உடையது. பலரும் காணக்கூடிய பிரகாசம் கொண்டது. நல்லனவற்றை அருளக்கூடியது. நல்லவற்றுள்ளே குடிகொள்வது.

பாடல் கேட்க:
ராகம்: சஹானா
தாளம் - ஆதி

Check this out on Chirbit

No comments:

Post a Comment