இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே
பொருள்:
இடுக்கண் பட்டு இருப்பினும் இரந்தி யாரையும்
விடுக்கிற் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளினாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே
இடுக்கண் - துன்பம். எவ்வளவு துன்பத்தில் கிடந்தாலும், நம்பெருமான் சிவனை விட்டு அகன்று, வேறொருவரைப் பார்த்து, "நீங்கள் என் துன்பத்தை போக்குகிறீர்களா?" என்று கேட்க மாட்டோம். சிவன் அவ்வாறு நம்மை விடமாட்டார்.
மலையின் அடியில் மாட்டிக்கொண்டு தவித்தாலும், சிவபெருமானின் அருள், நம் நடுக்கத்தை கெடுத்துவிடும். அந்த பஞ்சாக்ஷர மந்திரம் அப்படிப்பட்ட மகிமை வாய்ந்தது.
பாடல் கேட்க:
ராகம்: ஷண்முகப்ரியா, தாளம் - ஆதி.
a beautiful saama
ReplyDeletea beautiful saama
ReplyDeleteThank you mama.
ReplyDelete