Wednesday 28 September 2016

நமச்சிவாயப் பதிகம் - 02

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே

பொருள்:

அருங்கலம் - ஆபரணம் அல்லது உயர்வு/பெருமை

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை - பூக்களுக்கு ஆபரணம் போன்றது, விரிந்த இதழ்கள் கொண்ட தாமரை.

ஆவினுக்கு அருங்கலம் அரனஞ்சாடுதல் - ஆ - பசு. பசுவிற்கு உயர்வு, இறைவன் அபிஷேகத்திற்கு அது கொடுக்கும் பால்.

கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது - கோ - அரசன். கோட்டம் - வளைவு. அரசனுக்கு அழகு, நீதி தவறாமல் நிற்பது. எதற்காகவும் நீதியிலிருந்து வளைந்து செல்லக்கூடாது.

நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே - நம் நாவிற்கு ஆபரணம், நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரம்.

பாடல் கேட்க;
ராகம் - கல்யாணி, தாளம் - ஆதி.

Check this out on Chirbit

No comments:

Post a Comment